search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலவேம்பு கசாயம்"

    • பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம்.
    • தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    வண்டலூர்:

    மறைமலை நகர் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது, இதைத தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் நகராட்சியால் தயாரிக்கப்பட்டு பொது மக்களின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்ற வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயம் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் கூறும்போது, பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம். டெங்கு கொசு உற்பத்தியாகும் நிறுவனங்கள் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்களுக்கு அபராத விதிக்கப்டுகிறது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் ரா.புதுப்பட்டி பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    இதில் ரா.புதுப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் மாரியம்மன் கோவில் பகுதியில் பேரூராட்சி தலைவர் சுமதி தலைமையில் துணைத் தலைவர் ஜெயக்குமார், செயல் அலுவலர் கோபி ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். இதனை தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் வீடு, வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது.

    • நிலவேம்பு கசாயமும் பொதுமக்களுக்கு விநியோகம்
    • அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடத்தில் தனி வார்டு ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டுள்ளார்.

    சோதனை சாவடிகளில் கண்காணிப்பு

    இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன் இணைந்து சுகாதார பணியாளர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையானது இன்று 2-வது நாளாகவும் நீடித்தது. இன்று காலை வரை 900 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் காய்ச்சல் அறிகுறி தென்படவில்லை. தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து ரெயில்கள் மூலமாகவும் கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள் என ஏராளமானோர் வரக்கூடும் என்பதால் மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் வாரியாகவும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு அறிகுறியுடன் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை, டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்றும் கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடத்தில் தனி வார்டு ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது. தனி வார்டில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை சிகிச்சைக்காக சேர்த்து வருகிறார்கள். ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களையும் அந்த வார்டுக்கு மாற்றி டாக்டர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    • மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
    • டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது.

    கயத்தாறு:

    கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கயத்தாறு பேரூராட்சி மற்றும் மருத்துவ அதிகாரிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கட்டபொம்மன் தெருவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கயத்தாறு பேரூராட்சி மன்றம் ஏற்பாட்டில், மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். மேலும் கொசு புழு ஒழிப்புக்காக எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, முன்னாள் பேரூர் செயலாளர் இஸ்மாயில், வழக்கறிஞர் மாரியப்பன், சுகாதார அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி சுகாதார, துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×